Pages

Friday, February 26, 2010

சாதனை மனிதன் சச்சின் கடந்துவந்த சோதனைகள்


சச்சினை பொதுவாக நமக்கு சாதனை வீரராக மட்டுமே தெரியும் ஆனால் அவர் இந்த நிலையை அடைய கடந்துவந்த சோதனைகள் பல அவற்றை பற்றி பார்ப்போம் .

சச்சினின் டெஸ்ட் சதங்கள்
 சச்சின் எடுத்த   47 சதங்களில் 10 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 18 முறை சமநிலையும் 19 முறை வெற்றி.
சச்சின் கடந்துவந்த சோதனைகள்  :
  •  முதல் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி அவருக்கு ஏமாற்றம் அளிக்ககூடியதாகவே இருந்தது . முதல் இன்னிங்க்சில் 15 ரன்கள் அப்போது வக்கார் வீசிய  பந்து சச்சினின் தாடையைப் பதம் பார்த்தது; இரத்தக் கறைபடிந்த சட்டையுடன்  தொடர்ந்து ஆடிகிரிக்கெட் மீது தனக்கிருந்த ஆர்வத்தை அப்போதே  நிரூபித்தார் .

  • முதல் ஒரு நாள் போட்டிகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார் .

  • சென்னை,M.A.சிதம்பரம் மைதானத்தில்    ஜனவரி 31, 1999, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ரன்கள் ஆனால் இந்தியா தோல்வி அடைந்தது.

  • முதுகுவலியுடன் சச்சின் எடுத்த  சதம் . சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று கைதட்டினர்.

  • மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ரன்கள் இருந்தபோது  கேப்டன் ராகுல் டிராவிட் டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தார்  இதனால்  சச்சின்  இரட்டை சதம் எடுக்காமல் போனது. ஏன் அப்படி டிராவிட் செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.

  • இந்தியா அணிக்கு கேப்டனாக இருந்தபோது  இந்தியா தொடர்ந்து தோல்விகளையே தழுவியது . சிறந்த கேப்டனாக இருக்கமுடியாமல் போனது எல்லோருக்கும் இன்றுவரை வருத்தம்தான்.

  • 2001 ல்  நடுவர் மைக் டென்னஸ் போர்ட் எலிசபெத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக  சச்சினுக்கு  ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதித்தார்.ஆனால் தொலைக்காட்சியில் சச்சின் பந்தை துடைப்பதாக மட்டுமே தெரியவந்தது.ICC தலையிட்டு தடையை நீக்கியது.இந்தியாமுழுவதிலும் இருந்து நடுவருக்கு எதிராக கண்டனம் வந்தது.
  •  
  • 23 முறை சச்சின் 90-99 இடையே ஆட்டம் இழந்து  சதங்களை  தவறவிட்டிருக்கிறார்.

  • 1999 உலகக் கோப்பைப் நடுவே தந்தை இறந்ததால் இறுதி மரியாதை செய்ய  ஜிம்பாப்வே க்கு எதிரான   போட்டியில் கலந்துகொள்ளாமல்  இந்தியா சென்றார் ,அவரது தாயார் சொன்னதற்கிணங்கி   அடுத்த போட்டியான  கென்யாவிற்கு எதிரான ஆட்டத்தில்  141* எடுத்தார் இதனை தனது தந்தைக்கு அர்ப்பணிப்பதாகக்  கண்ணீர் மல்ககூறி அனைவரையும் கண்கலங்கவைத்தார் ...
  • சில  வாரங்களுக்குமுன் மும்பை இதியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று சொல்லி சிவாசேனா  தாக்ரேவால் கடுமையாக விமர்சிக்கபட்டார் இதனால் இந்தியாமுழுவதும் சிவ சேனாவிற்கு   எதிராக கண்டனம் தெரிவிக்க பிரச்சினை ஓய்ந்தது.
ஒருநாள் போட்டிகளில் அணி தோல்வி  அடைந்தாலும் ஆட்ட நாயகன் விருதை அதிகமுறை பெற்ற சாதனை & சோதனை அடைந்த ஒரே வீரர் நாம் சச்சின் தான்........

April 24, 1973 பிறந்த அவரின் பிறந்த நாளை உலக கிரிக்கெட் தினமாக கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் நிச்சயம்...
இதையும் படிங்க ..

சச்சின் சதம் அடித்தால் இந்திய அணி தோற்றுவிடுமா?


    1 comments:

    Tech Shankar said...

    தகவலுக்கு நன்றி தல.

    Post a Comment

    Related Posts with Thumbnails
     
    Related Posts with Thumbnails