Pages

Friday, July 10, 2009

தெண்டுல்கர் சாதனைக்கு ஆபத்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகிலேயே அதிக சதம் அடித்த வீரர் தெண்டுல்கர். அவர் இதுவரை 42 சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங் 37 சதத்துடன் இருந்தார். நேற்று நடந்த ஆஷஸ் கோப்பை டெஸ்ட் போட்டியில் ரிக்கி பாண்டிங் சதம் அடித்துள்ளார். இது அவருடைய 38-வது சதமாகும். தெண்டுல்கருக்கும் பாண்டிங்குக்கும் இடையே இன்னும் 4 சதங்களே இடைவெளி இருக்கிறது.
இப்போது நடைபெறும் ஆஷஸ் கோப்பை ஆட்டத்தில் இன்னும் 4 போட்டிகள் உள்ளன. இதிலே கூட பாண்டிங் மேலும் 4 சதங்களை அடித்து தெண்டுல்கரை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் சில மாதங்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டி எதிலும் விளையாட வில்லை. எனவே தெண்டுல்கர் சதம் அடிக்கும் வாய்ப்பும் இல்லை. அடுத்து இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகளில் தெண்டுல்கர் உடனடியாக சதம் அடித்தால் மட்டுமே தனது சாதனையை தக்க வைக்க முடியும்.
ஆடிக்கொண்டிருக்கும் வீரர்களில் தெண்டுல்கருக்கு போட்டியாக பாண்டிங்கை தவிர வேறு யாரும் இல்லை. எனவே பாண்டிங்கால் மட்டும் தான் தெண்டுல்கருக்கு ஆபத்து உள்ளது.

1 comments:

shabi said...

எந்த ஒரு சாதனையும் இன்னொருவர் முறியடிக்கத்தான்

Post a Comment

Related Posts with Thumbnails
 
Related Posts with Thumbnails